Friday, December 3, 2010

என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துவதென்ன....

வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துவதென்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன

கடல் அலைமோத
நிகழ்ந்தது கிடையாது
கனவு அலைகள் போல
ஓய்யாது ஹோ...
துணிவுகள் போல
விரல் தொடும் நிலமாக
இனிமைகள் வந்து சேரும்
நேரம் ஏது ஏது

வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன

வானொலியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோ
வீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோ
கோயிலிலே தீப விழா எனது தீபம் எதுவோ
பாதம் எல்லாம் கடற்கரையில் எனது பாதமும் எதுவோ
தேடி தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோ
காதல் நீரில் ஆசை நீரை தேடி என்ன இலாபமோ



வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன

காகிதமாய் நானிருந்தேன் கவிதை எழுதி பழக
நான் எழுதும் வேலையிலே மொழிகள் யாவும் தயங்க
தூரிகையாய் நானிருந்தேன் அழகை நான் வரைய
நான் வரையும் வேலையிலே நிறங்கள் ஓடி ஒழிய
வேறு வேறு வேஷம் போட்டேன் காணவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோணமே



வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துவதென்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன
 

No comments:

Post a Comment